×

திருவேங்கடம் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருவேங்கடம், டிச. 8: திருவேங்கடம் அருகே வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள உமையதலைவன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுந்தர்ராஜ் (33). வேன் டிரைவர். இவரது மனைவி, நேற்று முன்தினம் அருகே வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். சுந்தர்ராஜின் தாய் காளியம்மாள், நூறுநாள் வேலைக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதை நோட்டமிட்டு அறிந்து கொண்ட மர்மநபர்கள், காலை சுமார் 9 மணி அளவில் சுந்தர்ராஜ் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இந்நிலையில் மதியம் சாப்பிடுவதற்காக சுந்தர்ராஜ், வீட்டுக்கு சென்றபோது கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் மர்மநபர்களால் திருடுபோனது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்த திருவேங்கடம் எஸ்.ஐ. தாமரைலிங்கம் மற்றும் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்மநபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவேங்கடம் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Jewel ,Thiruvengadam ,
× RELATED வங்கியில் பணியாற்றும் நகை...